வெள்ளை வேன் கடத்தல் வழக்கு- சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்!

கொழும்பில் தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இதுகுறித்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

11 பேர் கடத்தப்பட்ட வழக்கில் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி, முன்னாள் ஊடகப் பேச்சாளர், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என 16 சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிட்த்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.