குரங்குக் கடிக்குள்ளான சிறுவன் படுகாயம்!!

திருகோணமலையில் குரங்கு கடித்ததில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இச்சம்பவம் இன்று காலை 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை-மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியை சேர்ந்தவரெனனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

குறித்த சிறுவன் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு காலை சாப்பாட்டை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் சென்ற குரங்கு காலை பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை குரங்கு கடித்து காயப்படுத்திய நிலையில், தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.

இதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.