அநாதரவாக வவுனியாவில் நின்ற யானைக்குட்டி!!
வவுனியாவில் அநாதரவாக அலைந்து திரிந்த யானைக்குட்டி ஒன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொகஸ்வெவ எனும் பகுதியிலே தாயின் துணையின்றி அநாதரவாக தேடியலைந்த ஆண் யானைக்குட்டியே நேற்று பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை தன் தாயினை தேடியபடி சிவில் பாதுகாப்பு படை தளத்திற்கு அருகில் வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த யானைக்குட்டியினை சிவில் பாதுகாப்பு படையினர் பிடித்து வவுனியா வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் .
இதனையடுத்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைக்குட்டியை மீட்டு வவுனியா கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி அல்லது அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரியை அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் யானையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வவுனியா பொகஸ்வெவ எனும் பகுதியிலே தாயின் துணையின்றி அநாதரவாக தேடியலைந்த ஆண் யானைக்குட்டியே நேற்று பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை தன் தாயினை தேடியபடி சிவில் பாதுகாப்பு படை தளத்திற்கு அருகில் வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த யானைக்குட்டியினை சிவில் பாதுகாப்பு படையினர் பிடித்து வவுனியா வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர் .
இதனையடுத்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானைக்குட்டியை மீட்டு வவுனியா கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி அல்லது அனுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்கள மிருக வைத்திய அதிகாரியை அழைத்து பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் யானையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo