யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசன் இடமாற்றத்தில் திடீர் திருப்பம்!!

யாழ் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் ஆ.தேவநேசன் மீள நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டை தொடர்ந்து, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர், இதற்கான நியமன கடிதத்தை வழங்கியிருந்தார்.
யாழ் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.தேவநேசன் அண்மையில், ஊர்காவற்றுறை வைத்தியசாலை பணிப்பாளராக இடமாற்றப்பட்டார்.
வடக்கு சுகாதார சேவைகள் திணைக்களத்திற்குள் சில காலமாக நிலவிய பனிப்போரின் விளைவாக இந்த இடமாற்றம் நிகழ்ந்ததாக கருதப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போதிய ஒத்துழைப்பை அவர் வழங்கவில்லையென குறிப்பிடப்பட்டு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அவர் இடமாற்றப்பட்டிருந்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த இடமாற்றம் நிகழ்ந்தது.
தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்ய முடியாதென்ற விதிமுறையை மீறி இடம்பெற்ற இந்த இடமாற்றத்திற்கு எதிராக வைத்தியர் ஆ.தேவநேசன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறையிட்டார்.
இதையடுத்து இந்த விடயத்தில் தலையிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு, விதிமுறையை மீறி இடம்பெற்ற தேவநேசனின் இடமாற்றத்தை இரத்து செய்தது.
இதற்கான அறிவித்தல் சில வாரங்களிற்கு முன்னரே வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும், இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலிருந்தது.
இந்த நிலையில் இன்று, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்படும் கடிதம் வைத்தியர் ஆ.தேவநேசனிற்கு, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.