கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் இருந்து வெளியேறிய கடற்படையினர்!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் தனிமைபடுத்தலை நிறைவு செய்த 222 கடற்படையினர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


வெலிசற கடற்படை முகாமினை சேர்ந்த 250 கடற்படையினர்'' கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் அவர்களின் 222 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்துடன், 223 பேரிடம் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த படையினர் கடற்படைக்கு சொந்தமான 5 பேருந்துக்களில் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.