உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் பாடதிட்டத்தை முழுமைப்படுத்தவும், பரீட்சைக்கு தயாராகவும் உரிய காலவகாசம் வழங்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


ஆசிரியர்கள், மாணவர்களின் அபிப்பிராயத்தை கருத்திற் கொண்டே உயர்தரப் பரீட்சையை நடத்த முன்னர் தீர்மானித்த திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.