கடற்படை மீது தாக்குதல் - நால்வர் அதிரடியாக கைது!!

யாழ்.அனலைதீவு பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை முகாமிற்குள் நுழைந்து தர்க்கத்தில் ஈடுபட முயற்சித்தவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த நபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் அவர்களை பார்க்க சென்ற கடற்படையினர் வழிமறிக்கப்பட்டு கற்கள், போத்தல்களை கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதலில் இரு கடற்படையினர் காயமடைந்திருந்ததையடுத்து தீவு முழுவதும் கடற்படையினால் முற்றுகையிடப்பட்டு தீவுக்குள் நுழைவதும், தீவிலிருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டபோதே தாக்குதல் நடாத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படையினர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.