6 பேர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டனர்!!
போதைப்பொருள், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 பேர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்த இருவருமாக மூவரை காத்தாதன்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
இன்று காலை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை குற்றச் செயல்களுடன் தேடப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ள நிலையில் ,காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo