ஜூலை 15 வரை பல்கேரியாவில் அவசரகால பிரகடனம் நீடிப்பு!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்தை பல்கேரியா அரசு ஜூலை 15 வரை நீடித்துள்ளது.

புதிய தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிடுவதாக சுகாதார அமைச்சர் கிரில் அனானீவ் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் பல்கேரியாயாவில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வினை அறிவித்த நிலையில் கடந்த வாரம் மட்டும் புதிதாக 606 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை சுமார் 130 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளதுடன் இதில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தின் அதிகரிப்பு மற்றும் கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பு காணப்படுகின்றது என தெரிவித்த சுகாதார அமைச்சர் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.