தேர்தல் ஆணைக்குழு இன்றும் கூடுகிறது


எதிர்வரும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் இன்று(10) மீண்டும் ஒன்றுக் கூடவுள்ளனர். அத்துடன் மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய, தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.