கல்வான் பள்ளத்தாக்கின் அருகில் பாலம் அமைத்தது இந்தியா!

இந்தியா – சீனாவிற்கு இடையிலான எல்லைப்பிரச்சினை போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய இராணுவம் கல்வான் பள்ளத்தாக்கின் அருகே பாலம் ஒன்றை அமைத்துள்ளது.

சுமார் 60 மீட்டர் நீளமுள்ள குறித்த பாலம் சீமந்து மற்றும் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் போர் பதற்றம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலத்தின் மூலம் கல்வான் ஆறு மற்றும் ஷையோக் ஆறு சங்கமிக்கும் முக்கிய பகுதியை எளிதில் அடையலாம் என்பதுடன் இராணுவ தளப்பாடங்களை கொண்டு செல்வதற்கு இலகுவாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷையோக் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் இந்திய-சீன உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஒசி) இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மேலும்  இந்திய-சீன படைகள் சண்டையிட்ட இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எல்லையில் மோதல் நடைபெற்றதையடுத்து பாலத்தின் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 72 மணி நேரத்தில் குறித்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.