இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை - முக்கிய பேச்சுவார்த்தை இன்று!

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வு காணும் நோக்கில் இருநாடுகளைச் சோ்ந்த இராணுவ உயரதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனர்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு,  டெம்சோக் ஆகிய பகுதிகளில் இந்திய-சீன இராணுவப் படைகளிடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது.
இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குவித்து வருகின்றன. எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வு காண்பது தொடா்பாக இரு நாட்டு இராணுவங்களின் தளபதிகள் இடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றாலும் அவை தோல்வியை தழுவின.
இந்நிலையில்  இரு நாட்டு இராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.  இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பிரச்சினைக்கு சுமுகமான தீா்வு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியத் தரப்பில் லெப்டினென்ட் ஜெனரலும், லே பகுதியின் தளபதியுமான ஹரீந்தா் சிங் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனத் தரப்பில் திபெத்தின் இராணுவத் தளபதி பங்கேற்பாா் என்று கூறப்படுகிறது.
பாங்காங் ஏரி,  கல்வான் பள்ளத்தாக்கு,  டெம்சோக் ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே இருந்த நிலைமை தொடர வேண்டும் என்றும் அப்பகுதிகளிலிருந்து சீனப்படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமா் நரேந்திர மோடி,  சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு வூஹானில் நடைபெற்ற அதிகாரபூா்வமற்ற சந்திப்பையடுத்து இரு நாட்டு ராணுவங்களும் வெளியிட்ட உத்தி சாா்ந்த வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.