வாள்கள், பெற்றோல் குண்டுகளுடன் கூடிய இளைஞர்கள்!!
யாழில் படையினர் வருவதை கண்டதும் தப்பி ஓடிய இளைஞர்களை துரத்தி சென்ற படையினர் அவர்கள் இருந்த இடத்தில் இருந்து வாள்கள், பெற்றோல் குண்டுகள் எனபனவற்றை மீட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் இளைஞர்கள் சிலர் கூடியிருந்துள்ளனர்.
அப்போது அப்பகுதி ஊடாக படையினர் வருவதை அவதானித்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை துரத்தி சென்ற படையினர் ஒருவரை கைது செய்ததுடன், அவர்கள் கூடியிருந்த இடத்தில் பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட பெற்றோல், இரு பெற்றோல் குண்டுகள், வாள் மற்றும் சைக்கிள் ஆகியவற்றை மீட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரும், பொருட்களும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் டெரிவிக்கபடுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




