கல்கிசை கடற்கரையில் குப்பை கொட்டப்படுவது தொடர்பில் முறைப்பாடு!!

கல்கிசை கடற்கரையில் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
கல்கிசை கடற்கரையில் சுமார் 200 சதுர அடி பரப்பில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவற்றை சோதனையிட்ட போது, அதில் கடந்த மே மாதம் பொதியிடப்பட்டமைக்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாரேனும் ஒருவரால் அல்லது உள்ளூராட்சி நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட கழிவுகளே கடற்கரையில் கொட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் கரையோர பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.