களுத்துறை மாநகர சபையின் மேயர் கைது!

களுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த சிறைச்சாலையொன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,

அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஏ டி நிலந்தவும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கடந்த 23 ஆம் திகதி குறித்த 2 பேர் உட்பட 12 பேர் மூடப்பட்டிருந்த மைதானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.
இதனையடுத்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.