கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 10 ஆக அதிகரித்தது!!
நாட்டில் இன்று காலை மேலும் 10 பேருக்கு தொற்று உறுதிப்படுத்த்ப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 602 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 397 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பற்காக 99 ஆயிரத்து 983 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo