படையினர் கோயிலுக்குள் பாதணிகளுடன் சென்றதை ஏற்க முடியாது – மாவை!!

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க  நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது படையினர் ஆலயத்துக்குள் பாதணிகளுடன் வந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.