மர்ம பொதி வெடித்ததது - இராணுவ அதிகாரி காயம்!!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வல்லைவெளிப் பகுதியில் வெடிபொருள் என நம்பப்படும் பொதி ஒன்று வெடித்ததில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்றுமாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது.
வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு சென்று பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, முகாமினுள் தவறுதலான வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிஸாரின் மேலதிக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.