டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் - பாதுகாப்பு பலப்படுத்தல்!!

தீவிரவாதிகள் டெல்லிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

டெல்லி பொலிஸாரும் அதிரடிப்படை வீரர்களும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நான்கு அல்லது ஐந்து தீவிரவாதிகள் நாசகார செயல்களில் ஈடுபடும் திட்டத்துடன் ஊடுருவியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இதனால், டெல்லி மாவட்ட பொலிஸார் நேற்றிரவிலிருந்து வாகன தணிக்கை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லி எல்லைகள் அதிரடிப்படை வீரர்கள் மூலம் அதிதீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.
இந்த எச்சரிக்கை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், டெல்லியில் உள்ள 15 காவல் மாவட்டங்களையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். எல்லைப் பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்தியிருக்கிறோம். உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை அடிப்படையில் வடக்கு டெல்லியை அதி தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
சீனா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.