அலுவலகங்களின் புதிய நேர அட்டவணை பரிந்துரை!

தனியார் மற்றும் அரச அலுவலகங்களின் ஆரம்ப மற்றும் நிறைவு நேரங்களில் மாற்றம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சமூக இடைவெளியை பராமரித்தல், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன் இந்த பரிந்துரை கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரச அலுவலகங்கள் காலை 09.00 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும், தனியார் துறை அலுவலகங்கள் காலை 09.45 மணி முதல் மாலை 06.45 மணி வரையிலும் இயங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரை அலுவலக நேரங்களில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.