பொத்துவில் கரையோர விகாரை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

பொத்துவில் முகுது மஹா விஹாரையை அண்மித்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணி அளவீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை, பொத்துவில் முகுதுமகா விகாரையை அண்மித்துள்ள பிரதேசத்தில் உள்ள மக்கள் குடியிருக்கும் காணிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று நில அளவீட்டுப் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது தொல்பொருள் திணைக்களத்தினரால் குறித்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசத்தில் மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் அமைதிப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அங்கு வந்த அதிகாரிகளுடன் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இன்றைய தினம் அரசாங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.