மலையக ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!!

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை புகையிரத நிலையத்தை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் நேற்று மாலை பட்டிப்பொல மற்றும் அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் 138வது மைல் கல் இடத்தில் வைத்து தடம்புரண்டது.
இதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்படைந்தது.
எனினும், இன்று அதிகாலை 4 மணியளவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.