தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எச்சரிக்கை!

தென்மேற்கு பருவ மழை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கேரளா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் லட்சத்தீவு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா மற்றும் கடலோரங்களை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பீகார் மாநிலத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று ஒரேநாளில் மாத்திரம் 83 பேர்  உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபாய்  இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.