ஆர்ப்பாட்டத்தின் போது நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி செயின்ட் லூயிஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

செயின்ட் லூயிஸ் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே, 16 மற்றும் ஆலிவ் வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த தாக்குதலின்போது, காயமடைந்த அதிகாரிகள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செயின்ட் லூயிஸ் பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செயின்ட் லூயிஸ் பொலிஸ்துறைத் தலைவர் ஜோன் ஹேடன் கூறுகையில், ‘இது கோழைத்தனமான நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். அதிகாரிகள் தற்போது உயிருடன் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகின்றேன்’ என கூறினார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.