வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கு கொரோனா!!

டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் அண்மையில் அரபு நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர்,  கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா தடுப்பு சிக்கிச்சை நிலைங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் நாடு திரும்பிய 168 பேர், வவுனியா- வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளை, அனுமதியளிக்கப்பட்ட வவுனியா சுகாதார திணைக்கள வைத்தியர் உட்பட்ட குழுவினர், நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டதன் அடிப்படையில், இன்று அவர்களது பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதன் பிரகாரம் கர்ப்பணி பெண் உட்பட 10 பேருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒருவரை முல்லேரியா கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் ஏனைய 9 பேரையும் காத்தான்குடியிலுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.