ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ‘விக்ரம் வேதா’, ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ உட்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார்.


அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் ‘புஷ்பா’ என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீஎன்ட்ரி செய்ய இருப்பதாகவும் இந்த படத்தில் அவருக்கு ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ‘கில்லாடி’, ‘புலன் விசாரணை 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகை ரோஜா, அதன்பின் முழுநேர அரசியல்வாதி ஆனதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பதும் தற்போது 5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு கடத்தல் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்றும் ஹீரோ அல்லு அர்ஜுன் கடத்தல்காரராக இந்த படத்தில் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஹீரோ அல்லு அர்ஜூன் நெகட்டிவ் ஹீரோவாகவும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை ரோஜாவும் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.