யாழ்.ஏலையில் துணிகரக்கொள்ளை!

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மர்மமான முறையில் வீட்டிற்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்பி பார்த்த போது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.