நாளை பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை!!

நாளை பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாக்களிப்பு ஒத்திகையை அம்பலாங்கொடயில் நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


வாக்களிப்பு ஒத்திகை முற்பகல் 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் இந்த ஒத்திகையின் அனுபவத்துடன் நாளை மறுதினம் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திகதியை தீர்மானம் செய்வதற்காக நாளைமறுதினம் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக சுகாதார துறையினருடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் தேர்தல்கள் ஆணைக்குழு பங்கேற்கவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.