யாழில் வாள்களுடன் மோதலுக்குச் சென்றவர்கள் மடக்கிப்பிடிப்பு!!

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியால் வாள் வெட்டு மோதலுக்குச் சென்றவர்களை மடக்கிப்பிடித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.


இந்தச் சம்பவம், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இராணுவம் வளிமறித்துள்ளது. இதன்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளுடன் பிடிக்கப்பட்ட இருவரும் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிடிபட்டவர்கள், யாழ். இந்துக் கல்லூரி பகுதி மற்றும் கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.