சாட்சியாளர் சட்டத்தரணி மீது முறைப்பாடு!!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் முகக் கவசம் அணியாது குறுக்கு விசாரணை செய்வது தொடர்பில் சாட்சியாளர் ஒருவரால் நீதிமன்றிடம் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூக இடைவெளியைப் பேணி சாட்சியை குறுக்கு விசாரணை செய்யுமாறு குறித்த சட்டத்தரணிக்கு மன்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சம்பவம்தொடர்பில் தெரியவருகையில்,
அரசியல் செயல்பாட்டாளர் ஒருவரிடம் 6 இலட்சம் ரூபா பணத்தை பெற்று நம்பிக்கை மோசடி செய்த குற்றச்சாட்டு வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் எதிரி சார்பில் முன்னிலையான குறித்த சிரேஷ்ட சட்டத்தரணி, சாட்சியாளரிடம் ஒரு மணிநேரம் குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார்.
அப்போது சாட்சியாளர் , எதிரி தரப்புச் சட்டத்தரணி முகக்கவசம் அணியாமல் தனக்கு அருகே வந்து குறுக்கு விசாரணை செய்கிறார் என நீதிமன்றிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.
சாட்சியின் முறைப்பாட்டையடுத்து, எதிரி தரப்புச் சட்டத்தரணியை சற்று தூரத்திலிருந்து குறுக்கு விசாரணையை முன்னெடுக்குமாறு மன்று அறிவுறுத்தல் வழங்கியது.
அதனடிப்படையில் குறுக்கு விசாரணையை குறித்த சிரேஷ்ட சட்டத்தரணி முன்னெடுத்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.