30 வருட போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி!

30 வருட போராட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடந்த சில ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே 7 பேரை விடுதலை செய்யும் முடிவை மத்திய மாநில அரசுகள் எடுக்கலாம் என்று கூறியும் இதுகுறித்த முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்றுடன் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து சமூக வலைதளத்தில் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆதரவாளர்கள் புதிய ஹேஷ்டேக் ஒன்றை தொடங்கி அதனை டிரெண்டு செய்து வருகின்றனர்.

அந்த ஹேஷ்டேக்கை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பேரறிவாளன் விடுதலைக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.