வவுனியா செட்டிகுளத்தில் கோர விபத்து- முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் புகையிரதம் - முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 9.15 மணியளவில் மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் செட்டிகுளம் துடரிகுளம் வீதி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையைக் கடக்க முயற்சித்துள்ளது.
அப்போது, குறித்த வீதியால் பயணித்த முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 55 வயதுடைய சகீது மௌலவி என்றழைக்கப்படும் முதலியார்குளம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.