பல் விழுந்ததை சமாளித்த தொகுப்பாளினி!

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளரின் பாதிக்கப்பட்ட பல் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த இக்கட்டான நிலையிலும் அனுபவமுள்ள செய்தி வாசிப்பாளர் நேர்த்தியாக சமாளித்து தொடர்ந்து செய்தி வாசித்த காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


உக்ரைன் நாட்டை சேர்ந்த அனுபவமுள்ள செய்தி தொகுப்பாளினி மரிச்கா படால்கோ. இவர் நேற்று நேரலையில் செய்தியை தொகுத்து அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது முன்பல் ஒன்று விழுந்தது. இதனை உணர்ந்த மரிக்சா உடனடியாக தன் கையில், விழுந்த பல்லை எடுத்துக்கொண்டு முக பாவனையில் எந்த வேறுபாடும் இல்லாமல் செய்தியை தொடர்ந்து வாசித்தார். மேலும் உடைந்தது முன்பல் என்பதால் அந்த பல் விழுந்த இடம் வெளியே தெரியாமலும் சமாளித்தார்.

செய்தியை நேரலையில் பார்த்த பலருக்கும் அவருக்கு பல் விழுந்ததே தெரியவில்லை. ஒருசிலர் மட்டும் கூர்ந்து கவனித்து பல் விழுந்ததை கண்டுபிடித்தனர். இருப்பினும் மிகவும் சாதுர்யமாக அந்த இக்கட்ட நிலையை அவர் சமாளித்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

நேரலை செய்தி வாசிப்பு முடிந்ததும் இதுகுறித்து மரிச்கா கூறியபோது, கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இரும்பு கடிகாரத்தால் தன் மகள் தாக்கியதாகவும், அதனால் தனது பல் பாதிக்கப்பட்டதாகவும் இருப்பினும் நேரலையில் செய்தி வாசிக்கும்போது இப்படி ஒரு நிலை வரும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும், தனது 20 வருட செய்தி வாசிப்பாளர் பயணத்தில் இது ஒரு ஆச்சரியமான அனுபவம் எனவும் கூறியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.