கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!

நடப்பு ஆண்டுக்கான கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், போட்டி அட்டவணையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நடப்பு ஆண்டுக்கான தொடர், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 33 போட்டிகள் நடைபெற இருக்கிறன. தாராபோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, போர்ட் ஒஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அரையிறுதி போட்டிகள், இறுதி போட்டி லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறும். முதல் போட்டியில் கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்த கயானா அமேசான் வோரியர்ஸ் – ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் நடைபெறும் முதல் ரி-20 லீக் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.