நீர்க்குழியில் வீழ்ந்து 17 வயது மாணவன் பரிதாப பலி!!

புத்தளம் சாலியாவெவ புளியங்குளம் பகுதியில் மாணவர் நீர் நிறைந்த குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சாலியாவெவ, இஹல புளியங்குளம், மஹாகமவில் வசிக்கும் 17 வயதுடைய மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யானைகளிடமிருந்து நிலக்கடலை தோட்டதை பாதுகாக்கச் சென்ற தனது தாத்தா மற்றும் மாமா ஆகியோருடன் குறித்த மாணவனும் சென்ற நிலையில் நீர்க்குழி ஒன்றில் முகத்தைக் கழுவ முயன்றபோது அதில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த குறித்த மாணவன் பல ஆண்டுகளாக வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சாலியாவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.