நான்கு நாட்களாக மின்தூக்கியில் சிக்கிய தாய்-மகள்!!உயிர் பிழைக்க என்ன செய்தார்கள் என்று பாருங்கள்!!

சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும் மகளும் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்து வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாயாரும் மகளும் வசித்து வந்த நான்கு மாடி குடியிருப்புக்குள் அமைந்திருந்த லிப்டில் இருவரும் மாடிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென அது வேலை செய்வதை நிறுத்தியுள்ளது.

இதில் 82 வயதான தாயாரும் அவரது 64 வயதான மகளும் சிக்கியுள்ளனர்.

இதனையடுத்து செய்வதறியாது திகைத்துப் போன இருவரும் உதவிக்கு அழைத்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்துள்ளனர்.

அதன்பின்னர் சுமார் 96 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு குழுவினரால் தாயார் மற்றும் மகள் மீட்கப்பட்டுள்ளனர்.

தாயும் மகளும் அண்மையில் ஜியான் நகரில் உள்ள கயாக்சின் மருத்துவமனையில் இருந்து பூரண குணம் பெற்று திரும்பிய பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

குறித்த பெண்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர் யின் கூறும்போது, அவர்களின் சமயோசித முடிவினாலேயே, லிப்டில் நான்கு நாள் சிக்கியிருந்தும் அதிசயமாக உயிர் பிழைத்ததாக அவர் கூறி உள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.