வவுனியாவில் விபத்து - முதியவர் பலி!

வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்றையதினம் மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கிப்பயணித்த பேருந்து உலுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியால் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்தநிலையில் நோயாளர்காவு வண்டிமூலம் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர்சிகிச்சை பயனின்றி இறந்துள்ளார். விபத்து தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.