விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள்!

யாழ்ப்பாணம் பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களில் இருவர் வேட்பாளர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு 03 போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் உள்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் கிளிநொச்சி திரும்பிச் சென்று கொண்டிருந்த போதே அவர்கள் விபத்தில் சிக்கியுள்ளார்கள்.
விபத்தில் சுயேட்சை குழு 03இன் தலைவரான சுந்தரலிங்கம் செல்வகுமார், வேட்பாளர் யோ.பியதர்சன் ஆகியோருடன் அவர்களுடன் இணைந்து பயணிந்த த. டர்சிகன் என்பவருமே காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.