அரச அதிகாரிகள் இருவர் போதைப் பொருளுடன் கைது!

பேலியகொடை – பட்டியகந்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் களனி குற்றவிசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் இருவரும் கொலன்னாவை மற்றும் களனி பிரதேச செயலகங்களின் அதிகாரிகள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட 250 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.