பெருமளவு கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் கஞ்சா போதைப் பொருளை தன் உடைமையில் வைத்திருந்த நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில் இல்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோ கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது முஸ்லிம் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்தவரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.