மின் கட்டணம் தொடர்பில் அமைச்சு அதிரடி அறிவிப்பு!!

பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளிவில் அறவிடப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில் அக்குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மின் பாவனையாளர்கள், பெப்ரவரி மாத மின் பட்டியல் குறிப்பிடப்பட்ட கண்டன அளவையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு செலுத்த முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.