சீன தூதரகத்தில் தீ விபத்து!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தூதரகத்தில் இருந்த பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம்  குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதாக சீனா கூறியது.

மேலும் இது மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை எனக்கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்கா உடனடியாக இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக சீனா குற்றம் சாட்டிய சில மணி நேரத்துக்குள் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.