புல்மோட்டை மீனவர்கள் 6 பேர் கைது!

முல்லைத்தீவு கடலில் அண்மை நாட்களாக தொடர்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் ஒளிபாச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் திருகோணமலையினை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில்

நேற்று முன்னால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மீனவர்கள் தங்கள் பிரச்சனையினை எடுத்துரைத்த போது அவர் உடனடியாக கடற்படை தளபதிக்கு தொடர்பு கொண்டு விடையத்தினை தெரியப்படுத்தியதுடன் அன்று இரவு மீனவர்களின் உதவியுடன் கடலில் இறங்கிய கடற்படையினர் இரண்டு படகுகளையும் 6 மீனவர்களையும் கைதுசெய்துள்ளார்கள்.

புல்மோட்டையினை சேர்ந்த பெருமனளவான மீனவர்கள் சட்டவிரோ கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினரை கண்டதும் ஓடியுள்ளார்கள்
தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கையினை கட்டுப்படுத்த கடற்படையினர் தொடர் நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.