மீனவர் ஒருவரின் சடலம் யாழ். ஊர்காவற்றுறை கடற்கரையில்!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த வயோதிப மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் சக மீனவர்கள், கடற்படையினர் இரண்டு நாட்களாக கடலில் தொடர்ந்து தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் இன்று காலை காங்கேசன்துறை கடற்கரையில் வயோதிபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.