பிரான்ஸில் அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த 23 பேருக்கு கொரோனா தொற்று!!
பிரான்ஸில், பெல்லிவில்-சுர்-லோயர் (Belleville-sur-Loire) அணு மின் நிலையத்தில் பணிபுரிந்த, 23 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாத இறுதியில் இங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிராந்திய சுகாதார நிலையம் இதுவரை 523 பேருக்கு வைரஸ் தொற்று சோதனை மேற்கொண்டுள்ளது. அவர்களில் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கேனும் அறிகுறிகள் தென்படவில்லை என அறிய முடிகிறது.
உறுதி செய்யப்பட்ட அனைவரும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மீதமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo