யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் மீட்பு!

முல்லைத்தீவு- முத்தையன்கட்டு காட்டுப் பகுதிக்கு கள ஆய்வுப் பணிகளுக்காக சென்றிருந்த நிலையில் காணாமல்போன யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த மாணவர்கள் ஆய்வு பணிகளுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது ஆய்வுக்காக சென்ற யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேர் காட்டுபகுதியில் தடம்மாறி சென்று காணாமல்போயிருந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் மற்றும் 64வது படைப்பிரிவு இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.