தமிழ்நாட்டில் ஒரேநாளில் 7000 பேருக்கு தொற்று!
மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் அதிகபட்சமாக 85 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் மூவாயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளன.
சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஐயாயிரத்து 471 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று 62 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட தனிநபர் கொரோனா பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 22 இலட்சத்து 62 ஆயிரத்து 738ஆக உள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை