கொரோனா தொற்று இலங்கையில் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 772 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதேநேரம் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் குணமடைந்து இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 655 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.