கல்குடா பொலிஸ் அதிகாரி இலஞ்சம் வாங்கும் போது கைது!!

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
எனினும், குறித்த செய்தியானது பழைய செய்தியாகும்.
கடந்த 2018 ஜூலை 10ஆம் திகதி குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த பழைய செய்தியை யாரோ ஒருவர் சமூக ஊடகத்தில் லைக் செய்ய, கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பலரும் புதிதாக பகிர்ந்து வருகிறார்கள்.
வாழைச்சேனை – கோரளைப்பற்று பிரதேச சபையில் வைத்து, அவர் ரூபா 3 இலட்சம் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
வியாங்கொட, கல்குடா பிரதேசத்தில் , செங்கல் கைத்தொழிற்சாலைக்கான, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மதிப்பீட்டு அறிக்கைக்காக, பொலிசாரினால் அறிக்கையொன்று வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில் , குறித்த அறிக்கையை வழங்குவதற்காக கல்குடா பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரியினால் இலஞ்சமாக ரூபா 5 இலட்சம் பணம் கோரப்பட்டிருந்த நிலையில் அதன் முதற்கட்டமாக ரூபா 3 இலட்சத்தை பெற்றுக் கொள்ளும்போதே அவரை இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனையடுத்து குறித்த அதிகாரி கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.