கொழும்பில் இன்னுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்!!

கொரோனா வைரஸ் தொற்றியவர் என சந்தேககிக்கப்படும் மற்றுமொரு நோயாளி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.

வீடொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 22 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், வீடொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மத்தேகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வழங்கப்படும் வரை வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த நபர் கடந்த 23 ஆம் திகதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபரை கைது செய்யுமாறு அறிவித்து விசேட பொலிஸ் அறிக்கை ஒன்று நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினமும் ஒரு கொரோனா நோயாளி வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியமையை அடுத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் சமூக பரவலாகிவிடுமா என்ற அச்சம் அடைந்திருந்தபோதிலும் அவ்வாறில்லை என சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒருவர் தப்பியோடியதை அடுத்து அவருக்கும் கொரோனா என சந்தேகம் மேற்கொண்டதை அடுத்து இதனால் சமூகப் பரவல் ஆகிவிடுமா என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளாதால் கொழும்பு பகுதி பரபரப்பு அடைந்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா நோயாளிகள் தங்கியிருக்கும் இடங்களில் இரட்டிப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தகக்து.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.